22/08/2021

மரியாதை

 மரியாதை

மதியாதார் தலைவாசல் 

மிதிக்க வேண்டாம்"


இந்த ஔவையின் கூற்று
அறிவுறுத்துவதென்ன?
மரியாதை தராதவர்களை
மதிக்க வேண்டாம் என்பதுதானே...

ஆம்... ஆனால்
கேட்டுப்பெறுவதல்ல மரியாதை
கேட்காமல் கிடைப்பதே மரியாதை
இருந்தும்...
இந்த மரியாதை...
இப்போது எங்கே போனது??

புலியைப் பார்த்து
பூனைகள் சூடுபோட்டால் பரவாயில்லை!
பூனைகளைப் பார்த்து
புலிகள் சூடுபோடலாமா?!

நம்மைப் பார்த்து
அந்நியர் மாறாவிட்டாலும் பரவாயில்லை!
அந்நியரைப் பார்த்து
நம்மவர் மாறலாமா?

பன்னாட்டு நிறுவனங்களில்
பணி புரிந்தால்
பணிவென்பது பறந்துவிடுமா?!

பேர் சொல்லத்தானே
பேர் என்று சொல்வோர்கள்
பெற்றார் பெயரையும்
பேர் சொல்லிதான் அழைப்பரா??

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்...
நம் தமிழ் மொழியில் மட்டும்தான்
நவில்கின்ற சொற்களில்
நயம் மிகுந்த பொருள் அதிகம்!

#வா என்ற சொல்லை
வா..வாடா...வாங்க..என்று
வயதுக்கேற்றார்போல்
வரிசைப்படுத்துதல் என்பது
வெறும் வார்த்தைகள் அல்ல..அவை
மரியாதையின் படிநிலைகள்!

ஆனால்...
ஆவ்...ஆயியே...என்கிற
இருநிலைகள் மட்டும்தான்
இந்திக்கு உண்டு!

கம்...என்று கதைக்கிற
ஒற்றை நிலைதான்ஆங்கிலத்திற்குண்டு!

இங்கே....
மொழி வெறும் மொழியல்ல
அது பண்பாட்டின் அடையாளம்...

இனியாவது மொழியுங்கள்
மரியாதையுடன்..
இல்லையேல்...
...
....
மரியாதை
கெட்டுப் போய்விடும்!

✍️செ. இராசா

No comments: