16/08/2021

சோம்பலை வெல் -- வள்ளுவர் திங்கள் 172

 #சோம்பலை_வெல்

தூக்கம் களையாமல் தோன்றாது நல்விடியல்
ஆக்கம் பெருக அகற்று
(1)

குழுவினர் எல்லாம் கொலுபொம்மை என்றால்
குழுவால் பயனென்ன கூறு
(2)

வாயிலே நன்றாய் வடைசுடுவர் என்றானால்
பாயில்தான் ஓடும் படகு
(3)

நாளை எனச்சொல்வோர் நாளையும் அப்படியே
நாளை எனச்சொல்வர்; நம்பு
(4)

குறைமட்டும் காண்போர் குறையெங்கும் காண்பார்
குறைதன்னில் காணார்;ஏன் கூறு
(5)

இமய மலையெல்லாம் ஏறலாம் பின்னே
இமைகள் இரண்டையும் ஏற்று
(6)

ஒலிம்பிக்கில் ஓடும்முன் உள்ளூரில் ஓட
விழிப்போடு சோம்பல் விலக்கு
(7)

அழுகிய ஆரஞ்சை அப்படியே விட்டால்
பழுதாகும் அத்தனையும் பார்
(8.)

சிறுசோம்பல் தானென்று சிந்தையில் வேண்டாம்
சிறுபொறிதான் பற்றிடும் தீ
(9)

வென்றவர் எல்லோரும் வென்றதன் காரணமே
தன்சோம்பல் வென்றதால் தான்
(10)

✍️செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_172

No comments: