09/08/2021

பிறர்மனை நோக்காதே -- வள்ளுவர் திங்கள் 171

  


#பிறர்மனை_நோக்காதே
#வள்ளுவர்_திங்கள்_171

அறம்பொருள் இன்பம் அதன்வழி வீடு
பிறர்மனை சேருமா வீடு?!
(1)

இலங்கையின் வேந்தன் எதனால் அழிந்தான்?
நிலைமாற மாறும் நிலை!
(2)

சிந்துவின் வேந்தன்* சிரமேன் இழந்தான்?
சிந்தைக்குள் ஏற்றிய தீ!
(3)
*சிந்துராஜன்_மகாபாரதம்
*துச்சலை_கணவன்

களவியல் கற்பியல் காட்டிய நூலில்
களம்மாறல் உண்டெனில் காட்டு?!
(4)

தடுப்பணை போட்டு தடுக்காது விட்டால்
தடம்மாறிப் போகும் தடு
(5)

சபலம் எழுகிற சாத்தியம் வந்தால்
உபவழி கண்டதை ஓட்டு
(6)

இயல்பினை மீறி இயக்குநீர்* செய்யும்
மயக்கத்தின் மாயையை மாற்று
*Harmone
(7)

யோக்கியன் என்பவன் யோக்கியதை எல்லாமும்
வாய்க்கின்ற வாய்ப்பின் வழி
(8.)

அகத்தின் அழுக்கை அகற்றிட வேண்டின்
மகளாய் சகோவாய் நினை
(9)

மாற்றானை நோக்கும் மகளிர்க்கும் கட்டாயம்
கூற்றுவனால் கிட்டும் கொடை
(10)

✍️செ. இராசா

No comments: