19/03/2021

கம்மாய் அழிகையில

 





கம்மாய் அழிகையில
கெண்டைப்பொடி புடிச்சதுபோல்;
தோப்புக் கிணத்துக்குள்ள
தூண்டிபோட்ட நாட்களைப்போல்;
ஊருவிட்டு ஊருவந்து
நாடுவிட்டு நாடுவந்து
தோகாக் கடலுக்குள்ள
தூண்டியில மீன் புடிச்சு
நம்மூரு புளிபோட்டு
நல்லாக் கொதிக்க வச்சு
கழுவிய மீனெடுத்து
கம கம கண்ணு கொதிக்கவிட்டால்
அடா அடா அடா.....
.......
அதச்சொல்ல முடியலையே
அதச்சொல்ல மொழியில்லையே....
✍️செ.இராசா

No comments: