17/03/2021

பணநாயகம்------வேதனை வெண்பாக்கள்



கொள்கையும் இல்லாமல் கோட்பாடும் இல்லாமல்
கொள்ளை அடிக்கவா கூட்டு
(1)

எப்படி எப்படியோ ஏறிவந்தாய்...அப்பாடி!
எப்படி வெல்வாய் இனி?
(2)

இலவுகாத்த பைங்கிளிபோல் என்னய்யா வாழ்வு?!
களவுகாக்க தந்திடுமா கை
(3)

மறுமலர்ச்சி என்றெல்லாம் வாய்கிழியச் சொன்ன
மறுமலர்ச்சி எங்கே?பொய்க் கோ?!
(4)

தூக்கி அடிச்சதினால் தூக்கி அடிச்சனரோ?
வாக்கிற்கு வக்கில்லா வாய்!
(5)

கட்சியைப் பற்றிடவே கட்சியைக் கொண்டுள்ள
கட்சியின் தேவையென்ன?! காசு!
(6)

நீட்டென்றும் டோலென்றும் நீடிக்கும் சோதனையில்
ஓட்டென்றால் வந்திடுமா ஓட்டு!
(7)

மையத்தில் நின்றாலும் ஓரத்தில் நின்றாலும்
பையைத்தான் பார்ப்பார்கள் போ!
(8)

தீரா விடமென்று தீராமல் திட்டிவிட்டு
தாராளம் காட்டனுமா? தா!
(9)

சதிமதம் பார்த்திங்கே சீட்டெல்லாம் தந்தாலும்
சாதிகளை வேரறுக்கும் காசு
(10)

உங்களில் ஒருவன்,

✍️செ. இராசா

No comments: