23/03/2021

இராசாவின் குறுஞ்சொற்பா----அறத்துப்பால்



#பாயிரவியல்

1. இறைவனைப் போற்று
2. மழைபோல் இறை
3. சான்றோரே சான்று
4. அறமே துணை

#இல்லறவியல்

5. இல்லறம் நாடு
6. மனைவியே தூண்
7. பிள்ளைகள் பேறு* (செல்வம்)
8. அன்பைப் பெருக்கு
9. விருந்தோம்பல் செய்
10. இன்சொல் இயம்பு
11. நன்றியுடன் நில்
12. சீர்தூக்கிப் பார்
13. ஐந்தை அடக்கு
14. ஒழுக்கம் உயர்வு
15. பிறர்மனையாள் தாய்
16. பொறுத்தால் ஜெயம்* (வெற்றி)
17. பொறாமை தவிர்
18. திருட்டை ஒழி
19. பிறர்பேச்சை நீக்கு
20. வீண்பேச்சை வெட்டு
21. கெடுவினையால் கேடு
22. உதவிசெய்(து) ஒழுகு
23. ஈகையே பெரிது
24. புகழ்பெற வாழ்.

#துறவறவியல்

25. அருளுடையார் ஆகு
26. புலால் விடு
27. தவமே விளக்கு
28. வேசம் விலக்கு
29. களவெண்ணம் கொல்
30. வாய்மையே;நேர் மெய்
31. கோபத்தை வெல்
32. துன்புறினும் வாழ்த்து
33. உயிர்க்கொலை ஊறு
34. நீர்க்குமிழி வாழ்வு
35. பற்றின்றி வாழ்
36. மெய்ப்பொருள் காண்
37. ஆசை அறு

#ஊழியல்

38. கர்மவினை பார்

என்னுரை
**************
திருக்குறள் போலே திரும்பவும் செய்ய
திருவருள் வேண்டும் தெளி
(1)

அசலொன்று கண்முன் அழகாய் இருக்க
அசலினைப் போலேன் அடுத்து?
(2)

இரண்டடிக் குள்ளே எழுசீர் அதுபோல்
இரண்டுசீர் வெண்பா இது
(3)

குறளின் குரலாய் குறுஞ்செய்தி ஆன
#குறுஞ்சொற்பா இஃதெனக் கூறு
(4)

இலக்கணம் வைத்தே எழுதிய போதும்
இலக்கணம் புதிதே இதில்
(5)

தலைக்கனம் இன்றித் தமிழை வணங்கி
மலையை உடைக்கும் உளி
(6)

ஔவைத் தமிழ்போல் அடியேன் குறுக்கிய
பாவைக் குறள்வழி பார்
(7)

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

(திருக்குறள் அதிகாரத் தலைப்புகளை ஔவையின் ஆத்திசூடிபோல் ஆனால் அப்படியே அல்லாமல், இரண்டு சீர்கள் வைத்து, அந்த இரண்டு சீர்களையும் வெண்பா வாய்ப்பாட்டில் பிணைத்து, ஈற்றுச்சீரான இரண்டாம் சீரை நாள்,மலர்,காசு, பிறப்பு என்ற வெண்பா வாய்ப்பாட்டிலேயே அமைத்தும் இதைப் படைத்துள்ளேன். இதற்கு #குறுஞ்சொற்பா என்று பெயரிட்டு தமிழன்னையின் கால்களில் அர்ப்பணிக்கின்றேன்‌.)

No comments: