05/03/2021

வாராயோ.....நீ...வாராயோ

 


இசையைப் பருகிட இதயம் ஏங்குது
திசைகள் எட்டிலும் தினமும் தேடுது
தசைக்குள் தீம்தனா தாளம் போடுது
பசைபோல் ராகம் பற்றிக் கொண்டது
 
வாராயோ.....நீ...வாராயோ
பாராயோ.....நீ....பாராயோ
 
✍️செ. இராசா
 
(இப்படி மரத்தில் அமர்ந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது. ஆம்.. சிறுவயதில் என் சொந்த ஊரான அம்மன் பட்டியில் இப்படி மாமரத்தில் உள்ளக் கிளைகளில் எத்தனையோமுறை அமர்ந்துள்ளேன். பல நாட்களுக்குப்பிறகு இன்று கத்தாரில் அப்படி ஒரு கிளையில் அமர்ந்தபோது என் சொந்த ஊர் ஞாபகமே வந்தது)

No comments: