20/03/2021

காலம் தாண்டிய வேதம்

  


(மலையாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவருக்காக போட்ட மெட்டிற்கு அடியேன் திருக்குறளை வைத்து சற்றுமுன் எழுதிய பாடல் இது.)

#காலம்_தாண்டிய_வேதம்- தீய
பேதங்கள் கூறாத வேதம்
பாரே பொதுவாய் ஏற்கின்ற வேதம்
ஓ......ஓர் மறை

காலம் தாண்டிய வேதம்- நாம்
வாழ்ந்திடக் கூறிடும் வேதம்
பாரே பொதுவாய் ஏற்கின்ற வேதம்
ஓ......ஓர் மறை

என்றும் திருக்குறள் நற்றமிழ் வேதம்
இந்த ஞாலத்தை மாற்றிடும் வேதம்
பாரத மண்ணின் பைந்தமிழ் நாட்டை
என்றென்றும் காக்கின்ற வேதம்
புத்தியில்ஏற்றிட புத்துயிர்தந்திடும்
நெஞ்சில்பதித்தால் நிமிர்ந்திட வைக்கும்
சகோதரா...படித்தால் படியேற்றும்
குறளோடு குரலேற்று கூடும்வாழ்வு- நாளும்
குறளோடு குரலேற்று கூடும்வாழ்வு

வள்ளுவம் வாழ்வியல் வாழ்த்துவோமே!

பிறப்பிலேயில்லை என்றைக்கும்பேதம்
யாகவாராயினும் நாகாக்க வேண்டும்
பொய்யுரையில்லா மெய்யுரைகாண
முப்பால் வைத்தே மூத்தோன் படைத்த
அறமும் பொருளும் கனிவுடன் காமமும்
ஒருங்கே நல்கிய ஒப்பற்றநூலை
சகோதரா...படித்தால் படியேற்றும்
குறளோடு குரலேற்று கூடும்வாழ்வு- நாளும்
குறளோடு குரலேற்று கூடும்வாழ்வு!

✍️செ.இராசா

No comments: