29/03/2021

நீ வருவாய் என---------வள்ளுவர் திங்கள் 153-------குறள் வெண்பாக்கள்

 

இணையவழி எத்தனைநாள் இப்படியே இன்னும்
இணையவழி என்ன இயம்பு
(1)
 
ஆண்ட்ராய்டு கைபேசி ஆகிடுமா ஆகாதே
ஆண்டுபல ஆனாலும் ஆண்
(2)
 
மின்கலம் தீர்ந்துவிட்டால் மென்பொருள் என்னாகும்?!
மின்னூட்டம் இல்லாமல் வீண்
(3)
 
காணொளிக் காட்சியில் கண்டுகொண்டால் போதுமா?!
கானல்நீர் ஆகாதே நீர்
(4)
 
நுண்கிருமி பற்றிவிட்டால் நோய்வரும் என்கின்றார்
நுன்நினைவை மிஞ்சிடுமா நோய்
(5)
 
வாட்சப்பில் வாழ்ந்திடவா வந்தென்னைக் கைப்பிடித்தாய்
வாட்டத்தில் நோகின்றேன் வா
(6)
 
ஒளிப்படம் காட்டி உசுப்பேற்ற வேண்டாம்
ஒளியேற்ற ஓடிவா நீ
(7)
 
கண்காணா நுண்கிருமி கண்டயிடம் போகையில்
உன்னாலே முடியாதா சொல்?!
(8)
 
இன்னுமின்னும் எத்தனைநாள் இப்படியே தள்ளிடுவாய்
இன்றைக்கே வந்துவி(டு) இங்கு
(9)
 
வருவாய் எனவெண்ணி வாசலிலே நின்றால்
வருவாய் வரவெண்ணி நீ
(10)
 
✍️செ. இராசா

No comments: