14/03/2021

அரேபிய மண்ணில் அனாதைபோல் நிற்கும்


 

மண்டையைப் பிளக்கும் வெயில்
சுருள வைக்கும் உஷ்ணக்காற்று
அலற வைக்கும் மணற்புயல்
அத்தனைக்கும் இடையில்
அரேபிய மண்ணில்
அனாதைபோல் நிற்கும்
அவனுக்குத்தான் தெரியும்....
மனதின் வலியென்பது
அதையெல்லாம் விடப்பெரிதென்று...

✍️செ. இராசா

No comments: