10/03/2021

என்னப் பெத்த தாயே நீ எங்கே

 


 (இசையமைப்பாளர் இலங்கை சுதாகரன் அவர்கள் வழங்கிய அருமையான ஒரு மெட்டுக்கு. எழுதிய பாடல்)

என்னப் பெத்த தாயே நீ எங்கே?
விண்ணை விட்டு வாராயோ நீ இங்கே
கண்ணீராலேதானே நனைந்தேனே
கானலான உனையும் நனைத்தேனே

விழிகளின்றி பார்வையா?!
வெளிச்சமின்றி காட்சியா?!
இரண்டுமின்றி பார் என்றால்
அநியாயம் இல்லையா?!

இறைவனின்றி கோவிலா?!
இரக்கமின்றி மார்க்கமா?
இதயமின்றி வாழ் என்றால்
அநியாயம் இல்லையா?!

.....என்னப் பெத்த

இருக்கிற பொழுதில் ஏனோ
புரியமறுக்குது மனசு
புரிகிற பொழுதினில் ஏனோ
இருக்கமறுக்குது உசுரு

அட போடா போடா விதி தானே வேறென்னடா
அட ஆமாம் போடா நம் தாயே தெய்வமடா

காற்றோடும் மூச்சோடும் நீதான் எங்கும் தாயே
ஊனோடும் உயிரோடும் நீதான் என்னுள் நீயே

உன்னால் தானே இங்கே நானும் தாயே....

✍️செ.இராசா

No comments: