20/03/2021

ஒரே கடலில்தானே ஒன்றாய்த் திரிந்தோம்

 


ஒரே கடலில்தானே
ஒன்றாய்த் திரிந்தோம்
பிறகு ஏன்;
வலையில் சிக்கியும் வஞ்சிக்கின்றீர்?!

ஒரே நீரில்தானே
உண்டு களித்தோம்
பிறகு ஏன்;
வெவ்வேறு விலைவைத்து பிரிக்கின்றீர்?!

ஓ...
நீங்கள் மனிதர்கள் அல்லவா?
பிறகு எப்படி;
இந்த ஏழை மீன்களின் வேதனை புரியும்?

✍️செ. இராசா

(தம்பி Ramesh Devar அவர்களின் பின்னூட்டத்தால் விளைந்த வரிகள் இவை.
மனமார்ந்த நன்றி தம்பி 🙏🙏🙏)

No comments: