17/09/2019

#கவிக்குறள்_அந்தாதி



கண்டதை எல்லாம் கவிதையாய்க் காண்கிற
கண்களே செய்யும் கவி!

கவியை நினைத்தே கரைந்திடும் எந்தன்
தவிப்பைத் தமிழே தணி!

தணிகை மலைவாழ் தமிழின வேந்தே
மணியாய்க் கவிதை அருள்!

அருளைத் தருகிற அன்னைத் தமிழே
இருப்பாய்க் கவியாய் இனி!

இனிக்க இனிக்க எழுதிக் குவிக்க
கனிவாய் வரணும் கவி!

✍️செ. இராசா

tagTag Photopin

No comments: