03/09/2019

இரைதேடும் பறவைக்கு ....




இரைதேடும் பறவைக்கு
இரைவைக்கும் ஒருவன்
இரைவைத்த பின்னால்தான்
இரையுண்ணப் போவான்!!!

இரைபோடும் பழக்கத்தில்
இரைவதைக் கண்டால்
இரைதரும் இவனே
இறைவனாய்த் தோன்றும்!!

இரைபோடும் அந்நாளில்
இரையிடும் போதே
இரையுண்ணும் பறவைகள்
இரையாவதும் கண்டான்!!

இரையுண்டு கொழுவெடுத்த
இரக்கமிலாப் பூனை
இரையென்று தின்றதனால்
இரைந்தானொரு கல்லை!

இரையாகும் சங்கிலியை
இறைசெய்த போது
இறை எதை ஆய்ந்தானோ
இறைவனிடமே கேட்போம்!!

✍️செ. இராசா

No comments: