14/09/2019

#நிலா_பேசுகிறது



புவியுலா செய்கிற என்னுருவைக்
கவியுலா செய்கிற மாந்தரைப்போல்
கனவுலா செய்திட நினையாமல்
நனவுலா செய்திட நினைப்பவரே
நிலவுலா செய்திடும் முன்னாலே
நிலவென் சொல்லைக் கேட்பீரோ?!

ரவியைச் சுற்றியே வருகின்ற
புவியைச் சுற்றியே வந்தாலும்
ரவியில் ஒளியை உள்வாங்கி
புவியில் புன்னகை செய்பவனின்
நிலத்தை தொட்டிடும் முன்னாலே
நிலவென் சொல்லைக் கேட்பீரோ?!

செயற்கைக் கோளில் ஏறிக்கொண்டு
இயற்கைக் கோளுக்கு வருபவரே..
அரசியல் கொள்ளையர் கூட்டத்தை
அவ்விடம் தனியே விட்டுவிந்தால்
இஸ்ரோ சிவனார் துணைகொண்டே
இவ்விடம் ராக்கெட் ஏவிடலாம்!!

No comments: