01/09/2019

இனிய திருமண வாழ்த்துகள்--#சேதுபதி_காவியாவை

இனிய திருமண வாழ்த்துகள்
***************************
#சேதுபதி_காவியாவை
சேருகின்ற நன்னாளில்
யாதுசொல்லி வாழ்த்திடுவேன்
யாசிக்கின்றேன் தமிழ்த்தாயை
யோசிக்காமல் வந்தென்னுள்
வாசிப்பாயே இக்கவியை..!!!


நகரம்பட்டி ஊரினிலே
சிகரம்போல் உயர்ந்தவரை
#சேதுபதி ஐயாவின்
#சுந்தரப் புதல்வரை
என்ன சொல்லி போற்றிடுவேன்?!
என்றைக்கும் வணங்கிடுவேன்!

#அப்பாவின் நண்பர்பற்றி
அப்பப்பா என் சொல்வேன்?!!
அப்போதும் நண்பரிவர்!
எப்போதும் நண்பரிவர்!

கட்டிடக் கலை பயின்றே
கட்டினாரே சித்தியை
சித்தியின் பெயர்போலே
கிட்டியதும் சித்தியே..!

ஆம்...

#விஜயா எனும் பெயர்போலே
விஜயமானாள் #சேதுராணி!
துடிப்பிலே சுட்டியாய்
படிப்பிலே கெட்டியாய்
பொறிஞர் முடித்ததுமே
பொதுப்பணித்துறை சேர்ந்து
பொறியாளர் ஆகி நின்றாள்!
பொறுப்பான தந்தையைப்போல்..

அடுத்த விஜயமாய்
அன்போடு வந்தவனே
அமைதியின் உருவமான
நம் தம்பி #சேதுபதி!!

இவனும் பொறியாளன்
இப்படி நான் நினைத்தாலோ
இவனே பொறியாளன்
என்று எண்ண வைக்கின்றான்?!

இவன் எழுதும் ஆங்கிலத்தை
இன்றைக்கும் படிக்கின்றேன்!!
இவன் எடுக்கும் புகைப்படத்தை
என்னவென்று வியக்கின்றேன்?!

இதற்குமேல் நான் சொன்னால்
அவனே அலறிடுவான்!!

😃😃😃😃😃

இதெல்லாம் சொல்லுவதில்
என்னப்பா இருக்கிறது?!!
நீங்கள் நினைப்பதெல்லாம்
நான் நினைக்க மாட்டேனா?!

பொறுமை..பொறுமை

பாரிலுயர் தமிழர்பலர்
பாரதியைப் படிக்கின்றார்!
பாவேந்தர் வரிகளினை
பாராயணம் செய்கின்றார்!

கற்ற வரிகளுக்கு
கைதட்டல் வாங்கிவிட்டு
காரியம் முடிந்தவுடன்
கைகழுவி விடுகின்றார்!

விதியில் பொய்யிருந்தால்
விதிவிலக்கும் உண்டன்றோ?!
மதியில் மெய்யிருந்தால்
மதிமயக்கம் இல்லையன்றோ?!

உயிர்மெய்யாய் பழகுவதில்
உயிர்மையாய் உருகுவதில்
தடைசெய்ய சாதி வந்தால்
உடைத்தெறிவார் நல்லோர்கள்!

அப்படி உடைத்தறிந்து
கற்றதுபோல் நிற்போரை
கவிதையில் வாழ்த்துவதும்
கற்றோரின் கடமையன்றோ!!!

தம்பிக்கு வெண்பா
*******************
கற்றதைக் கற்றபின் கற்றதுபோல் நிற்பவர்கள்
சொற்பமாய் மாறிவரும் சூழ்நிலையில்- அற்புதமாய்க்
கற்றதைக் காப்பாற்றி கன்னியைக் கைப்பற்றி
நிற்கின்றாய் இன்றைக்கு நீ!

வாழ்க வளமுடன் செல்வன் சேதுபதி!
வாழ்க வளமுடன் செல்வி காவியா!
வாழ்க வளமுடன் சுந்தரமூர்த்தி சித்தப்பா
வாழ்க வளமுடன் விஜயா சித்தி!
வாழ்க வளமுடன் சேதுராணி & மாப்சு!!

For Youtube:
https://youtu.be/9_ro9l1L8k0

இவண்,

இராசமாணிக்கம்

முக்கிய குறிப்பு:
***************
இன்றைக்கு எங்களுக்கும் 11வது திருமணநாள் என்பதை மிகுந்த மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments: