29/09/2019

தமிழை எனக்கு(ம்) ஊட்டிவிடு!!



ஒவ்வொரு நாளும் ஏங்குகிறேன்!
உனையே நினைத்து உருகுகிறேன்!

உன்னை உன்னால் வென்றிடவே
என்னை உன்னுடன் இணைக்கின்றேன்!

உன்னில் கரையும் பொழுதெல்லாம்
என்னை நானே இழக்கின்றேன்!!

இன்னும் இன்னும் வேண்டுமென்றே
இன்னும் உன்னை வேண்டுகின்றேன்!

தமிழே தாயே வந்துவிடு
தமிழை எனக்கு(ம்) ஊட்டிவிடு!!

No comments: