08/09/2019

#தலைமகனே_கலங்காதே


நிலவுகாட்டி சோறுவூட்டி
.............. நின்றதோடு அன்று
உலவுகின்ற கோளெழுப்பி
...............ஓடவிட்டாய் நன்று!
விலகிவிட்ட மூடரெல்லாம்
..............வெற்றியினைக் கண்டு
கலங்கியதால் தோல்வியென்று
..............கத்துகிறார் இன்று!

முயற்சிகளின் சோதனையில்
..............முட்டிமுட்டிச் சென்றே
வியக்கவைக்கும் சாதனையில்
...............மின்னிடுவாய் மீண்டு(ம்)
அயற்சியின்றி சூரியனாய்
...............ஆற்றலோடு நின்றே
தயக்கமின்றி சென்றிடுவாய்
...............சத்தியமே வெல்லும்!!

✍️செ. இராசா

பிரதமர் சொன்ன ஆறுதல் வரிகள்
********************************
"அறிவியலில் வெற்றி அல்லது முடிவை நோக்கி குறிவைக்க கூடாது. சோதனைகளைதான் செய்ய வேண்டும். அந்த சோதனை முயற்சிகள் வெற்றிக்கு அழைத்து செல்லும்”

(எவ்வளவு அருமையான உண்மை)

No comments: