26/09/2019

ஆழ்ந்த இரங்கல்கள்--நஷீர் ஐயா



உன்னை
நேற்றுதான் நினைத்தேன்..
ஆனால்....
காற்றோடு போவாய் என்று
சத்தியமாய் நான் நினைக்கவில்லையே..

நீ என் சாரதியாக மட்டுமா இருந்தாய்?!
நீ என் அன்பின் அதிபதியாக அல்லவா இருந்தாய்?!!

உன்னொடு எத்தனை நாட்கள்
உரையாடியுள்ளேன்...!!!
உன்னோடு எத்தனை நாட்கள்
உணவருந்தியுள்ளேன்...!!!

ஆனால்.. இன்று
நீ இல்லை என்ற செய்தியை
நான் எப்படி ஜீரணிப்பேன்..

ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா

No comments: