29/05/2021

மழைத் தூறும் நேரம்

 #மலையாள_மெட்டில்_ஒரு_காதல்_பாடல்

 

மழைத் தூறும் நேரம்
மனம் போடும் தாளம்
மதியோரம் எழும்கானம் பல கோடி...
கேளாயோ அன்பே...நம் காதல்ராகம்
கொஞ்சும் தமிழ்த்தேன் கவி நீயே

சில காலமாய் பனி மூட்டமாய்
சண்டைகள் ஏனோ?....... தெரியாதே
கடும் வெப்பமாய் சுடும் சொற்களாய்
கொட்டினால் ஐயோ.......முடியாதே
புதைஞ்சிருந்தாலும் வேர் மரந்தாங்கும்
ஒளிச்சுவச்சாலும் ஆழ் மனம் ஏங்கும்
காதலே....தூரம் போகாதே
#ஆரோமலே போதும் கொல்லாதே

✍️செ.இராசா

No comments: