17/05/2021

மீன்களின் பார்வையில் நீந்துகின்ற

மீன்களின் பார்வையில் நீந்துகின்ற நீர்-உலகம்
பேன்களின் பார்வையில் பற்றுகின்ற தலை-உலகம்
தேனீக்கள் பார்வையில் தேடுகின்ற பூ-உலகம்
வானூர்திப் பார்வையில் யாவுமே ப்பூ-உலகம்

பெரியோரின் பார்வையில் கடவுள்தான் பேருலகம்
தெரியாதோர் பார்வையில் தானென்ற பேர்உலகம்
உள்ளோரின் பார்வையில் உள்ளதேத் தன்-உலகம்
இல்லாதோர் பார்வையில் எல்லாமும் தன்-உலகம்

அருளாளர் பார்வையில் தவத்தாலே அவ்வுலகம்
தருவோரின் பார்வையில் தந்தாலே இவ்வுலகம்
அறியாதோர் பார்வையில் அறிவீனப் பொய்யுலகம்
அறிந்தோரின் பார்வையில் அறம்போற்றும் மெய்யுலகம்


#இருப்பதைக்_கொடு
#வள்ளுவர்_திங்கள்_149

✍️செ.இராசா

No comments: