31/05/2021

செல்வச் சிறப்பு----------இராசாவின் குறள்---------வள்ளுவர் திங்கள்-161

 


#செல்வச்_சிறப்பு
#இராசாவின்_குறள்
#வள்ளுவர்_திங்கள்_161

கையூட்டு* வாங்காமல் கண்ணியமாய்ச் சேர்த்தார்க்கேக்
கையூன்று** கோலாகும் காசு
(1)

(*லஞ்சம் **ஊன்றுகோல்)

வட்டிக்கு வாங்காமல் வையத்தில் வாழ்வோர்க்கேக்
கட்டிலில் நல்லுறக்கம் காண்
(2)

ஏமாற்றிச் சேர்க்கின்ற எக்காசும் நிற்காமல்
தாமாகப் போகும் தவிர்
(3)

கடன்தரும் அட்டையைக்* கையிலேப் பற்றார்
இடர்பெரு(று)ம் சிக்கலில்லார் இங்கு
(4)

*Credit card

சிந்தும் சிறுபருக்கைச் சிற்றுயிர்க்குப் பேருணவாம்
கொஞ்சமாய்க் கூடக் கொடு
(5)

செல்வோம் எனச்சொல்லும் செல்வத்தைச் சேர்ப்போரேச்
செல்லும்முன் நல்லறம் செய்
(6)

நிரந்தரம் இல்லா நிலையினை எண்ணி தரும்திறன் உள்ளதெனில் தா
(7)

தந்திடத் தந்திடத் தந்திட வேண்டியே
வந்திடும் தந்திட வா
(😎

வரவுக்கு மீறாமல் வாழ்கின்ற வாழ்வை
வரமென்று போற்றி மகிழ்
(9)

இருப்பதால் இல்லை இருப்போரின் செல்வம்
தருவதால் தானே சிறப்பு
(10)

✍️செ. இராசா

No comments: