20/05/2021

மேரே நசீப்மே பாடலுக்கு என் வரிகள்

 


 #மேரே_நசீப்மே_பாடலுக்கு_என்_வரிகள்

(நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலில் இதுவும் ஒன்று)

#குழு
என்னடி என்ன ஆச்சு
உன்பேச்சே டிரண்டாப் போச்சு
என்னடி என்ன ஆச்சு
ஆன்லைனே வைரல் ஆச்சு

என்னடி என்ன ஆச்சு
உன்தேகம் பாழாப் போச்சு
அம்மாடி உந்தன் மூச்சு
யாராலே சூடாப் போச்சு

என்னடி என்ன ஆச்சு
அச்சச்சோ எல்லாம் போச்சு

#பல்லவி
வாடா வசீகரா நீயே நீரடா
தீயா எரீகிற தேகம் தூரடா
வாடா வசீகரா நீயே பாரடா
தீயா எரீகிற மோகம் தீரடா

நீ வந்தால் தானே
நான் இங்கே நானே
அன்பே உன்னா லே உல்லா லலே..
வாடா வசீகரா நீயே பாரடா
தீயா எரீகிற மோகம் தீரடா

#சரணம்
கண்ணிலே புன்னகை
காட்டிடும் என்னவா...
கண்டதும் எந்நிலை
ஆனதைச் சொல்லவா...
கண்டிடாக் காதலைக்
கட்டிலில் காட்டவா..

ஏன் வெக்கம் போடா டேய் டேய்
நீ பக்கம் வாடா டேய் டேய்
ஏன் வெக்கம் போடா டேய் டேய்
நீ பக்கம் வாடா டேய் டேய்
நீ மட்டும் போதும் வேறென்ன வேண்டும்
நாம் பாட வேண்டும் உல்லாலலே

✍️செ. இராசா

(இப்பாடலை யாரேனும் பாட விருப்பமிருந்தால் பாடி அனுப்ப வேண்டுகிறேன்)

No comments: