27/08/2018

நல்லதாய்க் காண்போம் (குறளின் குரலில்)


நூறு சதம் நல்லவன் என்றும்
நூறு சதம் கெட்டவன் என்றும்
ஊரில் உலகில் காணும் உறவில்
யாரும் இல்லீங்கோ....

குறையே இல்லாக் குணவான் என்றும்
குணமே இல்லாக் குறையோன் என்றும்
இங்கே நாமும் காணும் உறவில்
இருந்தால் சொல்லுங்கோ...

நன்மை தீமை ஆய்ந்து அறிந்து
உண்மை அதனில் தெரிந்து தெளிந்து
சரியாய்க் கணிக்கும் மனிதர் வாழ்வே
சிறப்பாய் இருக்குங்கோ...

✍️செ. இராசமாணிக்கம்

No comments: