02/08/2018

யாதும் இனிமையே


ஓதும் வேதம் யாதுவாகினும்
பாடும் ராகம் ஏதுவாகினும்
யாதும் சொல்வது ஒன்று தானென
யாரும் அறிந்தால் இனிமை இனிமையே

தீதும் நன்றும் யாதுவருகினும்
மாதும் மதுவும் தேடிவருகினும்
யாதும் பற்றா வாழ்வு வாழ்ந்திட
யாரும் அறிந்தால் இனிமை இனிமையே

சூதும் வாதும் சூழ்ந்து வருகினும்
வீடும் உறவும் விட்டுவிலகினும்
யாதும் ஒருநாள் மாறும் என்பதை
யாரும் அறிந்தால் இனிமை இனிமையே

No comments: