04/08/2018

கரு ஊரில் பிறந்த நாம்.. (அண்ணா சொல்ல நான் எழுதியது )


கரு ஊரில் பிறந்த நாம்
கரூரில் ஒன்றானோம்.
கரூர் என்பதே
ஒரூர் என்றானோம்

சின்னக் கண்ணதாசன்
எங்கள்
அண்ணன் விக்டர்தாஸ்
ஒன்றானபோது
கரூரில் நன்றானோம்

குன்றிலமர்ந்து
எங்கள்
விக்டர்தாஸ்
அண்ணன் சொன்ன போது
குமரனாக அல்ல
இந்த இச்
சிவன்கள்
ஜீவன் நிறைந்தோம்

தான்தோன்றிமலை
அது
கரூரில் உளது
அது
தான் தோன்றிமலையா
அல்லது
அந்தோனி மலையா
என்றே வியந்து
கிறிஸ்துவமும்
இந்துவும்
இணைதல் கண்டோம்

மொத்தத்தில்
பூமி கண்டோம்
சாமி கண்டோம்
புலன்கள் வென்றோம்
புத்துயிர் கொண்டோம்

மதங்கள் பெரிதல்ல
மனங்கள் சிறிதல்ல
ஈதெல்லாம் கண்டோம்

இதெனினும் வேறெல்ல
அண்ணன் விக்டர்தாஸே சொன்னதுபோல்
கிருஷ்ணன் என்றாலும்
கிறிஸ்து என்றாலும்
சொன்ன தத்துவத்தின்
சுவை ஒன்றே
பொருள் ஒன்றே
இதனினும் வேறென்ன
மதநல்லினக்கம்

வாருங்கள்
நமக்குள்ளா உண்டு
பிற பிணக்கம்
வாருங்கள் நண்பர்களே

No comments: