22/08/2018

தெய்வம் தந்த பரிசு



கடையேழு வள்ளல்களில்
பேகன் என்ற பெயருண்டு.....
மயிலுக்கேப் போர்வை தந்த
மன்னன் என்ற சிறப்புண்டு...

அன்பான மகனுக்கு
அம்மன்னன் பெயர் வைத்தான்
என் நண்பன் சிவக்குமார்..

“சித்தப்பா” என்றழைத்தான்
“என்னப்பா?” என்றேன் நான்....
வாய் நிறைய அன்போடு
வாழ்த்துகள்” எனச் சொல்லி
அவனுடைய கடிகாரத்தை
எனக்கவன் பரிசளித்தான்....
மறுத்தாலும் கேட்கவில்லை...
மனத்தை அவன் மாற்றவில்லை...

அப்படியே கலங்கி விட்டேன்..
அவன் அன்பில் உறைந்து விட்டேன்...

அவன் செய்த சாதனைக்கு
அவன் அப்பா வழங்கியதை
இவன் எனக்குப் பரிசளித்தான்
அவனிடம் கேட்காமலே....

பெயர் காக்கும் பிள்ளையென்று
பெரியோர்கள் சொன்னதுபோல்
பேகனின் பெயர் காத்தப்
பேகனை வாழ்த்துகிறேன்!

வாழ்க வளமுடன் மகனே..
வாழ்க வளமுடன் பேகனே..

No comments: