22/08/2018

எந்தை களிப்புற்ற

பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் வாழ்த்துக்கவிகள் வழங்கிய அனைவருக்காகவும் இந்தக் கவிதை
சமர்ப்பணம்
*******************************


எந்தை களிப்புற்ற
விந்தை விளையாட்டில்
சொந்தப் பதிவோடு
வந்த வினையொன்று

தாயின் கருவறையில்
வாயில் கதவுடைத்து
மாய உலகிற்கு
வாழ வந்திறங்கி

புவியின் மேலமர்ந்து
ரவியைச் சுற்றிவந்து
பதியைக் காணாமல்
பலநாள் ஆகியதில்

பிறவிப் பிழையாலே
உறவுக் கடன் சுமந்தே
பாசப் பிணைப்பாலே
வேசம் கொண்டதிலே

வருடம் ஓடியதே
வயதும் கூடியதே
வருத்தம் பெருகியதே
வருவது வரவில்லையே...

யாவிலும் இருப்போனே
யாரிடம் நானுரைப்பேன்
நாயிலும் கீழோனை
நாயகா பொருத்தருள்வாய்

உள்ளே என்னுள்ளே
உறையும் என்னிறைவா
அன்பாய் இருந்திடவே
என்னை வைத்தருள்வாய்..

✍️செ. இராசமாணிக்கம்

அனைவருக்கும் நன்றி
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்


✍️செ. இராசமாணிக்கம்

அன்புடன்

Surendrakumar தம்பி
Muthu தம்பி
Siva Thamilappan நண்பர்
Prabhakaran Prabha நண்பர்
Kavitha Raja மனைவியார்
Yamunarani Yamuna சகோ
சேதுமாதவன் அண்ணா
Ramasamy Ramu சித்தப்பா

மற்றும்

உள்பெட்டியில் வாழ்த்துகள் வழங்கிய அனைவருக்கும் நன்றி

No comments: