25/08/2018

#காவிரிக்_கரையினிலே--119வது களஞ்சியம் கவிதைப் போட்டி-மூன்றாமிடம்


119வது களஞ்சியம் கவிதைப் போட்டி
************************************
கிடைத்த இடம்: மூன்றாமிடம்
நடுவர்_________: திரைப்படப் பாடலாசிரியர், திரு. நிகரன் அவர்கள்
அமைப்பு_______: தமிழ்ப்பட்டறை
(8 இலக்கியப் பேரவைகள் உள்ளது)
தலைவர்_______: திரு. சேக்கிழார் ஐயா
🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼

#காவிரிக்_கரையினிலே
தாவிவந்த பூங்கொடியே...
ஆடிவரும் உன்னழகு
ஆச்சரியம் தருகுதடி

தேனே...தெள்ளமுதே
தேடிவந்த காவிரியே
துள்ளிவரும் உன்னழகு
துயரங்களைப் போக்குதடி

மானே....மரகதமே
மலைக்குடகு திரவியமே
அசைந்துவரும் உன்னழகில்
அங்கமெல்லாம் நனையுதடி

கண்ணே... கனியமுதே
கன்னடத்துப் பைங்கிளியே
அணைமீறும் உன்னழகை
அணைத்திடவே ஆசையடி

அன்பே... அற்புதமே
அர்த்தமுள்ள காவியமே
நீர்கொஞ்சும் உன்னழகே
நினைவெல்லாம் நிற்குதடி

✍️செ. இராசா


https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2127826534202918/

No comments: