02/08/2018

அழகே....!(குறளின் குரலில்)


கள்ளில் என்னடி போதை?- உன்
கண்ணில் தானடி போதை!
புகையில் என்னடி போதை?- உன்(புன்)
நகையில் தானடி போதை!

மலரில் என்னடி மதுரம்?- உன்
இதழில் தானடி அதிகம்!
இருளில் என்னடி சிறப்பு?- உன்
குழலில் என்னிற இருப்பு?!

முத்தில் என்னடி வெண்மை?- உன்
முகத்தில் தானடி உண்மை!
நிலவில் என்னடி களங்கம்?- உன்
நினைவில் என்னுள்ளம் கலங்கும்!

உலகில் ஏதடி அழகு?- உன்
உருவில் தானடி என்னுலகு!
கவிதை என்னடி கவிதை- உன்
கவர்ச்சி தானடி கவிதை!

No comments: