15/08/2018

72வது சுதந்திர தின வாழ்த்துகள்


வருடா வருடம் வருகிறது
வருவது போலவே செல்கிறது
எதுவும் இங்கே மாறவில்லை
இதுவும் ஒருநாள் அவ்வளவே....

ஆயிரம் ரூபாய் ஆனதைப்போல்
ஆகுதே தேசம் என்செய்வோம்?!
ஆயினும் ஆள்வோர் சொல்கின்றார்
ஆனதன் காரணம் பிறரென்று....

எங்கும் எவரும் பொறியாளர்
எங்கே வேலை?!! சொல்லுங்களேன்..
எங்கும் எவரும் நெறியாளர்
எங்கே நியாயம்?! கேளுங்களேன்....

ஊழல் எங்கும் பெருகிடவா
உரிமைச் சுதந்திரம் நாம்பெற்றோம்
உழவன் கண்ணீர் சிந்திடவா
உதிரத்தை ஆறாய் ஓடவிட்டோம்...

மழலையைத் தனியாய் விடுவதற்கே
மனங்களில் தைரியம் வரவில்லையே
காந்தியின் கனவாய் இருக்கின்ற
மாண்புள்ள சுதந்திரம் வந்திடுமோ?!

வரும் என்ற நம்பிக்கையில்.....

72வது சுதந்திர தின வாழ்த்துகள்

✍️செ. இராசா

No comments: