12/08/2018

விருந்தோம்பல் (குறளின் குரலில்)


அன்பில் தொடங்கும் இல்வாழ்க்கை
அடுத்த இல்லம் தொடர்வதற்கு
விருந்தே நல்வழி என்றறிந்து
விரும்பி அதனைச் செய்திடுவோம்!

அகநக முகநக பண்புகளால்
பன்முக நட்பினை உருவாக்கி
நன்முக மதிப்பைத் தனதாக்கி
என்றும் சிறப்புற வாழ்ந்திடுவோம்!

வந்தோர் அனைவரும் மகிழ்வுரவே
விருந்து அளித்து உபசரித்து
வருவோர் வரவை எதிர்பார்த்து
வாழ்ந்திட நாமும் பழகிடுவோம்!

No comments: