08/08/2018

வள்ளுவன் பேசுகிறேன்


தொண்ணூற்று ஐந்திலே
விண்ணோக்கிச் சென்றிடவா
தொண்ணூற்று ஐந்தடியில்
என்னுருவைச் செய்தாய் நீ...

வங்கக் கடலோரம்
வந்து நீ இருந்திடவா
முக்கடல் சங்கமத்தில்
முழுஉருவைச் செய்தாய் நீ....

அண்ணாவின் பீடத்தில்
அமர்ந்தென்னைக் கண்டிடவா
அறத்துப்பால் பீடத்தில்
கற்சிலையை வைத்தாய் நீ...

முத்தமிழ் அறிஞனாய்
முழுநேரம் பேசிடவா
முப்பால் படைத்த என்னை
முழுச்சிலையாய் வடித்தாய் நீ...

தலைநகரில் நீ இருந்து
தமிழ்நாட்டைக் காத்திடவா
தமிழ்நாட்டின் மறு முனையில்
தனிச்சிலையாய் வைத்தாய் நீ....

மெரீனாப் புரட்சிகளை
மெருகேற்றி உசுப்பிடவா
கருணாநிதி நீயும்
கல்லறைக்குப் போனாய் நீ....

ம.கோ.ராவோடு
மறு நட்பு கொண்டிடவா
அனைவரின் படைசூழ
அமரனாய்ச் சென்றாய் நீ...

கவலை வேண்டாம்...

தன்மானத் தமிழர்களை
தலைநிமிர வைத்ததினால்
மறைதந்த என்னோடு
மறையாமல் நிலைப்பாய் நீ...

வா...மகனே...வா

No comments: