04/04/2018

கவிச்சரக் கவிதை - ஊடகம்


 
மிழ்த்தாய் வணக்கம்
*********************
வள்ளுவனைப் பெற்றெடுத்த
தெள்ளுதமிழ் அன்னைக்கு
கொள்ளுப்பேரன் உரிமையிலே
உளமார வாழ்த்துகின்றேன்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தலைமை வணக்கம்
*******************
குறைவான வார்த்தையிலே
நிறைவான கவிபடைக்கும்
குறுங்கவிதைக் கோமகனின்
வருங்காலத் தலைமுறைக்கு
வழிகாட்டும் பெருங்கவிஞர்
கவி முத்து அவர்களையும்
கரமுயரத்தி வணங்குகின்றேன்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தமிழ்ப்பட்டறை அவை வணக்கம்
*******************************
வேறெங்கும் இல்லாத
வேறுபட்ட நிகழ்வோடு
பட்டையைக் கிளப்புகின்ற
பட்டறை அவையினையும்
மனதாலே மொழியாலே
மகிழ்வோடு வணங்குகின்றேன்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
ஊடகங்கள்
***********
உள்ளதைச் சொல்லிடவே- அன்று
ஊடகங்கள் வந்ததன்றோ?!
உண்மையை மறைத்திடவே- இன்று
ஊடகங்கள் முயலுதன்றோ?!

எச்செய்தி உண்மையென்று- இங்கே
எவருக்குமேத் தெரியவில்லை!
பலசெய்தி பரப்புகின்ற- பல
ஊடகங்கள் பெரியதொல்லை!

இணையதளம்
****************
நூலகத்தை தேடித்தேடி
நொந்துபோன காலமுண்டு!

வானொலிக்குக் கடிதம்போட்டு
விரும்பும் பாடல் கேட்டதுண்டு!

ஒளியும் ஒலியும் பார்ப்பதற்கு
ஒரு வாரம் காத்ததுண்டு!

பத்திரிக்கை படிப்பதற்கே
பல இடங்கள் போனதுண்டு!

இவையனைத்தும் ஓரிடத்தில்
இலவசமாய்க் கிடைப்பதினால்
இணையதளம் நமக்கெல்லாம்
இனியவரம் என்றறிவோம்!

நன்றி நவில்தல்
***************
இணையத்தள முகநூலில்
இணைந்துள்ள கவிஞர்களின்
இமயமாக உயர்ந்துள்ள
கவிச்சர அவையினிலே
கவியெழுத வாய்ப்பளித்த
அனைவருக்கும் நன்றிகூறி
அடியேன்யான் வணங்குகின்றேன்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

செ. இராசா

No comments: