29/04/2018

அக்கினியாய்த் துணிந்திடு---களஞ்சியம் கவிதைப் போட்டியில் (102) பங்குபெற்ற கவிதை



தூத்துக்குடி மாநகரே
துக்கவீடா மாறுதய்யா..
தூத்துக்குடி உப்பில்கூட
துர்மணமே வீசுதய்யா..

பெற்றெடுத்த பிஞ்சுகூட
புற்றுநோயால் சாகுதய்யா
கொத்துக்கொத்தாய் சாவதற்கா
பெத்துநாங்க போட்டோமய்யா...

ஒருத்தன் சம்பாதிக்க
ஒருஊரே சாகனுமா?
ஒத்தூதும் தலைவர்களே
ஓருவார்த்தை சொல்லுமய்யா?!

ஸ்டெர்லைட்டு நிறுவனத்தால்
செல்லெல்லாம் மாறுதிங்கே
அடுத்தத் தலைமுறையே
அநாதை ஆகுதிங்கே....

அமைதியாய்ச் சொல்கின்றோம்
அரக்கனே ஓடிவிடு!
சாக்கடை நிறுவனத்தை
சீக்கிரமாய் மூடிவிடு!

மாட்டிற்குச் செய்ததைப்போல்
மாணவரே சேர்ந்துவிடு!
அமைதிப்படை கொண்டே
அக்கினியாய்த் துணிந்துவிடு!

✍️செ. இராசா

No comments: