24/04/2018

அன்புத் தம்பிக்காக....



வாழ்க்கை என்பது பயணமடா- நீ
வாழ்க்கையை வாழ்ந்திடப் புரியுமடா!
வாழ்க்கை என்பது பள்ளியடா- நீ
வாழ்க்கையைக் கற்றிட வேண்டுமடா!

வெற்றியும் தோல்வியும் சகசமடா- நீ
வெற்றென நினைப்பது மூடமடா!
வெற்றியும் ஒருவகைப் போதையடா- நீ
வெற்றியில் ஆடுதல் மடமையடா!

ஒருமுறை வாழ்ந்திடும் வாழ்க்கையடா- நீ
அறமுறை வாழ்வியல் வாழ்ந்திடடா!
பலமுறை வென்றிட முடியுமடா- நீ
வழிமுறை அறிந்திட வேண்டுமடா!

காலம் இங்கே சாட்சியடா- நீ
காலத்தை ரசித்தால் கவிஞனடா!
காலம் சொல்வது நீதியடா- நீ
காலத்தை அறிந்தால் ஞானியடா!

——✍️செ.இராசா

No comments: