09/04/2018

தமிழ்-4


எப்படி இத்தனை காலங்களாய்-நீ
இப்படிப் பொலிவுடன் திகழ்கின்றாய்?!
எப்படி இத்தனை முதுமையிலும்-நீ
இப்படி இளமையாய்த் தெரிகின்றாய்?!

எங்கும் இடர்கள் வருகையிலும்-நீ
எங்ஙனம் இப்படி சிறக்கின்றாய்?!
எங்கும் மூடர்கள் பெருகையிலும்-நீ
எங்ஙனம் உயரத்தில் உலவுகின்றாய்?!

கற்களில் சொற்களை தடம்பதித்து-நீ
காட்டினாய் உன்பெயர் தமிழென்று!
பனையின் ஓலையில் கவிபாடி-நீ
படைத்தாய் சாதனை அதுசான்று!

ஆங்கில மோகக் காலத்திலும்-நீ
அற்புதம் படைப்பது அதிசயமே!
முகநூல் மோகக் காலத்திலும்-நீ
முதன்மையில் நிற்பது அதிசயமே!

தரணியில் தனியாய்த் தெரிகின்ற-என்
தமிழே நீயென்(றும்) அதிசயமே!
தன்னிக ரில்லா மொழியான-என்
தாயே நீயென்(றும்) அதிசயமே!

—— செ. இராசா—-

No comments: