18/04/2018

90வது கவிச்சரம்-முகநூல் குழுமம்


 💐💐💐💐💐💐

தமிழ்த்தாய் வணக்கம்
**********************
ஆதிமுதல் அகத்தியமாய்
ஆழம்நிறை தொல்காப்பியமாய்
அழகுத் திருக்குறளாய்
அற்புதத் திருவாசகமாய்
கம்ப ராமாயணமாய்
பாரதி கவிதையாய்
உலகாளும் தமிழ்த்தாயை
உள்ளத்தால் தொழுகின்றேன்!


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


கவிச்சரத்தலைமை வணக்கம்
*****************************
மருத்துவச் சேவையோடு
தமிழ்ச்சேவை செய்கின்ற
மாண்புமிகு நடுவரையும்
மனதார வாழ்த்துகின்றேன்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தமிழ்ப்பட்டறை அவை வணக்கம்
********************************
வருங்காலக் கவியரசரும்
வருங்காலக் கவிக்கோவும்
உருவாகும் தளமாக
உருவாக்கும் தளமாக
இருக்கின்றப் பட்டறையை
இதயத்தில் வாழ்த்துகின்றேன்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

முகநூல் குழுமம்
****************
ஒத்த கருத்துடையோர்
ஒருகுடையில் சங்கமித்து
தம்தம் பதிவுகளை
தவறாமல் அரங்கேற்றி
குழுவின் விதியோடு
குழுமத்தில் பயணித்தால்
முகநூல் குழுமங்கள்
முழுநிலவாய் ஒளிவீசும்!!

⌨️💻📱💻📱🖥💻⌨️

நிர்வாகிகள்
***********
எண்ணித் துணிந்தேதான்
ஏற்கின்ற பொறுப்புகளை
மூத்தோர் சொல்கேட்டு
முறையாகச் செல்வோரே
இணையத்தில் சிறப்புருவர்!
இலக்கினை அடைந்திடுவர்!
அரங்கேற்றம் ஆவதிலே
அற்புதங்கள் குறைந்தாலும்
அதனுள்ளே நிறைகண்டு
அழகினைக் காண்போரே
குன்றாகத் தெரிந்திடுவர்!
எந்நாளும் சிறந்திடுவர்!

👨🏻‍💼👨🏻‍🏭👩🏻‍🏭👨‍✈️🧕👷‍♀️👩‍👧‍👧👨🏻‍💼

நன்றி நவில்தல்
**************
அறிஞர்கள் அவையிலே
கவிஞர்கள் சபையிலே
எனக்கும் வாய்ப்பளித்த
எழில்மிகுப் பட்டறையை
மனமாலே மொழியாலே
மகிழ்வோடு வணங்குகின்றேன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ.இராசா

No comments: