24/04/2018

வாரியம் கேட்பதற்கா.....?



நெஞ்சு பொறுக்குதில்லையே-தமிழா
நெஞ்சு பொறுக்குதில்லையே

வாரியம் கேட்பதற்கா- பல
காரியம் செய்கின்றான்!
உரிமையைக் கேட்பதற்கா- நமை
உயிர்வதைச் செய்கின்றான்!

பயிர்களை அழித்திடவா- இவன்
கெயிலினைக் கூட்டிவந்தான்!
நிர்க்கதி ஆக்கிடவா- இவன்
நீயூட்ரினோ கொண்டுவந்தான்

மக்களைக் கொல்வதற்கா- இவன்
மதுக்கடை நடத்துகின்றான்!
ஆட்களைக் கொல்வதற்கா- இவன்
ஆலைகள் திறக்கின்றான்!

நெஞ்சு பொறுக்குதில்லையே-தமிழா
நெஞ்சு பொறுக்குதில்லையே!

பொறுத்தது போதுமய்யா- நாம்
பொறுத்தது போதுமய்யா!
இன்னும் பொறுத்திருந்தால்-நம்
இழப்புகள் கூடுமய்யா!

✍️செ. இராசா

No comments: