17/04/2018

அறியாத அறநூல்கள்



அறியாத அறநூல்கள்
அறிகின்ற முயற்சியிலே
அறநூல்கள் நான் புரட்ட
அறிந்துகொண்டேன் ஒரு விடயம்;
அறிவிலி நானென்று.....
அறியாமைப் பதரென்று...

அறிந்தது துளியென்றும்
அறியாதது கடலென்றும்
அறிந்ததால் திகைக்கின்றேன்....

அறிந்தது பொடியென்றும்
அறியாதது அண்டமென்றும்
அறிந்ததால் வியக்கின்றேன்...

அறியஅறியத் தெரிவதெல்லாம்
அறியாத ஓர் உலகம்!
அறியஅறியப் புரிவதெல்லாம்
அறியாத பல உலகம்!

(அறியாத ஒன்றை
அறிந்ததாய் நினைப்பதும்
அறியாதது எதுவென்றே
அறியாமல் இருப்பதும்
அறியாமை என்பதாகும்)

No comments: