11/04/2018

காவிரி கிடைக்கலையே



பச்சை காட்டச்சொல்லி
பச்சோந்தி சொல்லுகின்றான்!
கருப்பு நிறமென்றால்
காவிக்குப் பிடிக்காதாம்!

உண்ணா விரதமென்று
ஊருக்குச் சொல்லிவிட்டு
உணவு இடைவெளியில்
ஊரை ஏப்பம் விடுகின்றான்

அடிமை அகதிகளின்
எடுபிடி அரசியலால்
காவிரி கிடைக்கலையே..
கவலையும் தீரலையே..

No comments: