12/04/2018

முருங்கை_மரமும்_நானும்



எங்கிருந்து வந்தாயோ?!
எப்படிநீ வந்தாயோ?!
யாதொன்றும் அறியாமல்
யாமுன்னை நேசித்தேன்....

நீரில்லா தேசத்தில்
நீ நின்றாய்த் தனியாக
நீர் வார்க்கும் நல்லன்பில்
நான் வந்தேன் துணையாக..

பாசநீர் காட்டாமல்
பாவிநான் மறந்துவிட்டால்
பசலையால் பரிதவித்து
பசுமையைத் துறக்கின்றாய்!

அருகிலே நான்வந்து
அன்புநீர் தந்துவிட்டால்
அருவத்தின் மொழியாலே
அன்பினைக் காட்டுகின்றாய்!

வாடி நீயும் நிற்கையிலே
நாடி நானும் வந்துவிட்டால்
அரும்புகின்ற புன்னகையை
முருங்கையே நானறிவேன்....!!

#முருங்கை_மரமும்_நானும்

No comments: