09/04/2018

நீயே வா... நதியே--100வது களஞ்சியம் கவிதைப் போட்டி (வெற்றிக்கவிதை)

100வது களஞ்சியம் கவிதைப் போட்டி- (வெற்றிக்கவிதை)
***********************************
கிடைத்த இடம்: மூன்றாமிடம்
நடுவர்: திரு. வசந்த் சுப்பையா அவர்கள்
குழுமம்: தமிழ்ப்பட்டறை
தலைவர்: திரு. சேக்கிழார் ஐயா
🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼

 

நீயே வா... நதியே
*****************
தடுப்பணை போட்டு தடுத்தியே நிறுத்தி
பிடித்து வைத்த கயவர்களே- நீர்
தடுப்பது மடைமை விடுவது கடைமை
பிடித்ததை உடனே விடுவீரோ?!

படைத்தவன் படைத்த படைப்பில் சிறந்த
படைப்பினை அறியா மூடர்களே- நீர்
தடுப்பதைத் தடுக்கும் ஆணையை மதித்து
கொடுப்பதை உடனே கொடுப்பீரோ?!

நடிப்பதில் சிறந்த நடிகர்கள் நிறைந்த
நாட்டில் பிறந்த உறவுகளே- நீர்
நடித்து நடித்து நாட்டினைப் பிடித்த
நடிகரை இனியும் நம்புவீரோ?!

திராவிடப் போர்வையில் திராவகம் வீசிய
திராவிட நாட்டின் தலைவர்களே- நீர்
திராவிடம் மறந்த திராவிடர் மூவர்க்கும்
திராவிடர் யாரெனச் சொல்வீரோ?!

கெடுப்பவர் இடத்தில் பிடிபிட்டுக் கிடந்து
கொடுத்திட நினைக்கும் காவிரியே- நீ
தடுத்திடும் கரங்களை நீயே உடைத்து
துடிப்புடன் பாய்ந்திடு பெருநதியே...

—-✍️செ.இராசா—-


https://www.facebook.com/photo.php?fbid=2114536638792414&set=gm.2010932879225618&type=3&theater&ifg=1 

No comments: