18/04/2018

பிரிவு


உடலோடு உயிராக
உதிரத்தில் உறைந்தவளே!
கண்ணோடு இமையாக
என்னோடு இருப்பவளே!
இசையோடு கவியாக
இதயத்தில் நுழைந்தவளே!
கவிபாடும் குயிலாக
கனவிலும் வருபவளே....!

பிரிவென்ற தமிழ்ச் சொல்லே
பருதியாய்ச் சுடுகுதடி!
அகராதியில் அச்சொல்லை
அழித்திடவே வேண்டுமடி!

--செ. இராசா---

(தமிழ்ச்சோலை வள்ளுவர் திங்கள்-10 நிகழ்விற்காக எழுதியது)

No comments: