24/11/2021

சாமியே நீ யல்லால்

 


சாமியே நீ யல்லால்
பாரிலே யாருள்ளார்?!

புலிவாகனனே வா ஐயா...
சிவமாதவனே வா ஐயா...
அழைத்த உடனே அரிஅர மகனே
அபயமளித்திட வா ஐயா

தேகபலம் தா ஐயப்பா
வாழவரம் தா ஐயப்பா... (புலி வாகன..)

கார்த்திகை மாதம் மாலையணிந்து
கானகம் வருகிறோம் ஏன் ஐயா?!
காரிருள் சூழும் மாயையொழித்து
காத்திட வேண்டும் நீ ஐயா‌..

காலம் முழுதும் கானலாயுழன்று
காலனை அடைவதும் வீண் ஐயா..
ஞாலம் முழுதும் ஞாயிறு-எனவே
ஞானமாய்த் தோன்றிநீ வா ஐயா

தேகபலம் தா ஐயப்பா
வாழவரம் தா ஐயப்பா... (புலி வாகன..)

✍️செ. இராசா

No comments: