16/11/2021

எப்போதும் பூரிக்கே ......இன்சுவையில் வெண்பாவோ?!

 

 


 #மசாலாவின்_கேள்வி
எப்போதும் பூரிக்கே
......இன்சுவையில் வெண்பாவோ?!
இப்பூரி பக்கத்தில்
.......யாமின்றி- உண்பாயோ?!
அப்பப்பா போதும்பா
.......ஆண்பாலர் வாயப்பா
செப்பும்பா என்னே சிறப்பு?

#பதில்
ஒப்புகிறேன் என்செய்ய?
........உப்பிய பூரிகண்டு
தப்புதான் செய்துவிட்டேன்
........தண்டனையைச் செப்பாயோ?
இப்போது சொல்லுகிறேன்
......என்றைக்கும் நீயின்றி
அப்பூரி போகுமா ஆறு!

✍️செ. இராசா

No comments: