29/11/2021

சொல்லறம்---வள்ளுவர் திங்கள் 187

 #சொல்லறம்
#வள்ளுவர்_திங்கள்_187

சொல்லறம் இல்லாமல் சூழ்கின்ற சுற்றத்தைச்
சொல்லாமல் நீங்(க்)கச் சுகம்
(1)

சொல்லிய சொல்லைத் துறக்கின்ற பேருக்குச்
சொல்லிப் பயனென்ன சொல்
(2)

சொல்சுத்தம் இல்லாமல் சொல்வோரின் சொல்கேட்டு
செல்லாமை என்றும் சிறப்பு
(3)

உறவின் பெயரால் உறவாடி பின்னே
மறப்பதா நல்லோரின் மாண்பு
(4)

இழந்தபணம் வந்துவிடும் என்றைக்கும் யார்க்கும்
விழுந்தசொல் வந்திடுமா மீண்டு?
(5)

வாங்கும் வரைக்கும்தான் வாக்குறுதி எல்லாமும்
வாங்கியபின் மாறும் மனம்
(6)

நேரத்தை காலத்தை நிந்தனை செய்வோரை
ஓரத்தில் வைத்தால் உயர்வு
(7)

இதோவெனச் சொல்லி இழுத்தடிப்பு செய்தால்
அதோடு தொடர்பை அறு
(8.)

கடிகார ஓட்டங்கள் காக்குமா யார்க்கும்?!
முடிந்தவரை செய்து முடி
(9)

சேர்த்தால் பணமென்பர் செத்தால் பிணமென்பர்
பீத்தாமல் யோசித்துப் பேசு
(10)

✍️செ. இராசா

No comments: