22/11/2021

ஒழுக்கமில்லார்----வள்ளுவர் திங்கள் 186


கல்லால் அடித்தால்தான் காமவெறி நாயடங்கும்
சொல்லிப் பயனில்லை தூக்கு
(1)

ஆசிரியர் தெய்வமாம் அப்படித்தான் கற்பித்தீர்
கூசிடும் செய்கையேன் கூறு?!
(2)

கற்பிக்கும் கல்வியில் கற்புநெறி இல்லையெனில்
கற்பவை எல்லாம் கசடு
(3)

மற்றோரைக் கைகாட்டி மௌனிக்கும் யாரையும்
கற்றோரில் சேர்க்காமல் காண்
(4)

தற்கொலைக் போக்கிற்கு தண்டனை யாருக்கு?!
பெற்றோரும் தானே பிழை
(5)

இளையோரும் பார்க்கும் இணையத்தில் காமம்
இலைமறை இல்லையே ஏன்?
(6)

கவர்ச்சியைத் தூண்டிக் கலையென்று சொல்வோர்
அவசியம் தேவையா? ஆய்!
(7)

ஊடகம் பூடகமாய் ஊதுகின்ற போக்காலும்
நாடெல்லாம் பற்றும் நிலை
(8.)

மீசை முளைக்கையில் மின்னலாய்த் தோன்றுகிற
ஆசையை ஆராய்ந்(து) அகற்று
(9)

காமத்தின் பாதையைக் கல்வியால் சீர்செய்யத்
தாமதிக்கக் கூடா(து) அரசு
(10)

✍️செ. இராசா

ஓவியம் Krishna Kv


No comments: