15/11/2021

எமக்காக யாம் பாடிய பாடல்



#மெட்டு_விழியில்_விழிமோதி

உயிரில் உயிர்மோதி
உலகில் ஒயிரன்று பிறந்ததே
கனவு நனவாகக் கவிதை பலபாடி கடந்ததே
வான்...தேடல்கொண்டே...
போராடுதென்றே....
எங்களோட இராசனைக்
கொண்டு போன ஈசனே..
கொண்டு போன ஈசனே...

#மெட்டு_என்னைத்_தாலாட்ட

அந்த ஆகாயம் பறந்தானோ
ஆதி ஆராய உயர்ந்தானோ
இங்கே வேராகப் பதிந்தானோ
இல்லை வேறாகப் படர்ந்தானோ

செந்தமிழில் தானே
........நித்தம் படைத்தானே
உந்தன் பிள்ளை
........உன்னை என்றும் மறப்பானோ
மின்னல் போலே
.......மின்னியவன் மறைந்தானே...

......(அந்த ஆகாயம்)

காலையும் மாலையும் தன்னுள் தேடினான்
ஆலயம் தாண்டியும் எங்கோ ஓடினான்
ஏதோ ஏதோ மெட்டில் பாடினான்

காலமும் நேரமும் இன்றி ஓதினான்
ஆழமும் ஆசையும் கொண்டு நாடினான்
தீரா வேகம் நெஞ்சில் ஏற்றினான்..

ஆத்மார்த்த ராகங்கள் கேளாயோ
ஆத்மாவின் தியாகங்கள் பாராயோ
கர்த்தாவே கண்பார்க்க மாட்டாயோ
பக்தாவின் வேண்டல்கள் தீராயோ
உனைத்தானே தினம் தேடினான்

.....(அந்த ஆகாயம்)

அகமும் புறமும் அவன் பார்வையில்
கவியாய் மலரும் உடன் வார்த்தையில்
ஞாலம் என்றும் அவன் சிந்தையில்

கடமை தவறவில்லை வாழ்க்கையில்
கடனாய்ப் பழகவில்லை சேர்க்கையில்
உண்மை நேர்மை அவன் கொள்கையில்

அவனுக்கோர் நல்வெற்றித் தந்தாயோ?!
பலர்முன்னே யாரென்று சொன்னாயோ?!
வலியோர்முன் வாய்ப்பிங்கே கிட்டாதோ?
எளியோர்கள் ஏன்வெல்ல முடியாதோ?
உனைத்தானே தினம் தேடினான்..

.....(அந்த ஆகாயம்)

✍️செ. இராசா

No comments: