02/11/2021

சின்ன மீனப் பெரியமீனு திங்குது

 


சின்ன மீனப் பெரியமீனு திங்குது- அது
என்ன செய்ய அதுக்கும் வேற வழியில்லை
ஒன்னு வாழ ஒன்னு இங்கே சாகுது- இது
என்ன கதை எனக்கும் ஒன்னும் புரியல...

வேகங் கொண்ட உசுரு
வேட்டையாடும் போது
பாவம் கொண்ட உசுரு
சாவநோக்கிப் போகும்!

தாகங் கொண்ட உசுரு
தத்தளிக்கும் போது
ஈரங் கொண்ட உசுரு
எந்தவுசுரப் பார்க்கும்!

✍️செ. இராசா

(இன்று காலையில் கத்தார் கார்னீஷ் கடற்கரையில் நான் கண்ட ஓர் காட்சி. காலையில் கடல்நீர் மிகவும் தெளிவாகக் கண்ணாடிபோல் தெரிந்தது...நிறைய மீன்கள் வேகமாகச் சென்ற அழகை இரசித்த படியே நின்றிருந்தேன். அப்போது திடீரென்று மின்னல் வேகத்தில் ஒரு பெரிய மீன் வந்து கூட்டத்தில் சென்ற மீன்களில் ஒன்றைக் கவ்விச்சென்றது. இப்படி மூன்றுமுறை 5 நிமிடங்களில் தன் பசிக்காக வேட்டையாடியது ஒரு பெரிய மீன். அப்போது எழுந்த பாடலே இது....)

No comments: